சின்ன வயசுல இருந்தே, எனக்கு பேருந்துல பிரயாணம் பண்ண ரொம்ப பிடிக்கும், நெரிச்சல் இருந்தாலும், அடுத்தவன் என்ன பண்ணுறான், என்னென்ன பேசுறானுங்க, எந்தெந்த தோரணையில பேசுறானுங்க, எத்தனை விதம்மான மக்கள்கள், இவுங்கள எல்லாம், அவுங்களுக்கு தெரியாம ரசிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப நெடுந்தூரம் பிரயாணம் அப்படின்னா இடையில வண்டி நிக்கிறதுண்டு.
எல்லாம் முடிஞ்சு, வண்டி எடுக்கிற நேரத்துல வேகம்மா ஓடி வந்து ஏறுற ஆளுங்க ஒரு ரகம், வேற எதாவுது வண்டியோட ஹாரன் சத்தத்த கேட்டு, நம்ம வண்டியா இருக்குமோனு வந்து பார்த்து ஏமாந்து போயி, எதுக்குடா வம்பு'னு சீக்கரம்மே வந்து உட்காருர ராகம் ஒண்ணு,
இடத்துக்காக துண்டு போட்ட இடத்துல, வேற ஒரு ஆள் உட்கார, கீழ தூக்கிப்போட்ட துண்டு எடுத்திக்கிட்டு அமைதியா இருக்கிற ரகம் ஒண்ணு, எடுத்த துண்ட கடுப்பா உதறிட்டு வண்டி கிளம்பின 20 நிமிஷத்துக்கு பிற்பாடு கொஞ்ச கொஞ்சாம முணுமுணுத்த வாய் சத்தம்மா சண்ட போட ஆரம்பிக்கிறது ஒரு ரகம்.
பொம்பளைங்க கிட்ட சிலிமிஷம் பண்ண உடனே பொங்கி எழுற கூட்டம் ஒரு ரகம், ஐயோ ! ஐயோ ! இப்படி பண்ணுறானே என்ன பண்ணுறது'னு தெரியாம முழிக்கிற சில பேர் ஒரு ரகம்.
கையுல குழந்தையோட கூட்டத்துல ஏறுற அம்மாவை, ஏம்மா இந்த நெரிசலுள குழந்தையோட ஏறுரனு திட்டுற ஆண்கள் ஒரு ரகம், நீங்க முதலுல ஏறுங்கனு வழிவுடுற ஆண்கள் ஒரு ரகம்.
வண்டில ஏறின அம்மா, குழந்தைய கேட்காமையே, மடியில உட்கார வச்சு, மாமா மடியில சமத்தா உட்கார்ந்திக்கனும்னு சொல்லுறது ஒரு ரகம், நீங்க உட்காருங்க இல்ல குழந்தையாவுது கொடுங்கன்னு கேட்டாலும், இல்ல கண்ணு நீ உட்காரு, நான் இந்தா இறங்கிருவேனு சொல்லி, ரொம்ப நேரம்மா குழந்தைய சுமந்த படியே பயணம் பண்ணுறவுங்க ஒரு ரகம்.
பேருந்து பூராம் கேட்கிறமாதிரி சத்தம் போட்டு பேசுற கூட்டம் ஒரு ரகம், எது நடந்தாலும் கண் கொட்டாம எதையோ நினைச்சு வெறிச்சோடி பார்க்கிற கூட்டம் ஒண்ணு.
நூறு ரூபாய் நோட்டு வாங்கி ரெண்டு ரூபாய் பயணச்சீட்டுக்கு சில்லுற கொடுக்கிற conductor ஒரு ரகம், ஐந்து ரூபாய் பயணச்சீட்டுக்கு, இருபது ரூபாய் நோட்ட வாங்கி, ஏன் ஐந்நூறுபாய் நோட்டு இல்லையானு நக்கலா கேட்கிற conductor ஒரு ரகம்.
எவ்வளோ சின்ன இடத்த கொடுத்தாலும் அதுல அமைதியா உட்காருர ரகம் ஒண்ணு, எவ்வளோ பெரிய இடம் கொடுத்தாலும் இன்னும் இடுப்ப இடுப்பால தள்ளுறது இன்னொரு ரகம்.
தான் இறங்கப்போற இடம் வந்திருச்சான்னு பக்கத்துல இருக்கிறவன்கிட்ட ஒரு தடவைக்கு மூணு தடவை கேட்டு, இறங்குற இடம் வரதுக்கு ரெண்டு 'ஸ்டாப்புக்கு' முன்னாலையே கம்பிய பிடிச்சு நிக்கிற ஆளுங்க ஒரு ரகம், தான் இறங்க வேண்டிய இடம் தாண்டினது கூட தெரியாம அடுத்த 'ஸ்டாப்புல' எல்லாத்தையும் இடிச்சிக்கிட்டு இறங்கிற ஆளுங்க ஒரு ரகம்.
பொது வாழ்க்கை, அரசியல், சினிமா இதப் பத்தி பேசுற ஆண்கள் கூட்டம் ஒரு ரகம். முன்னப் பின்ன தெரியாதவுன்களா இருந்தாலும், அக்கா தங்கச்சி மாதிரி நெருங்கி பேசுற பெண்கள் கூட்டம் ஒரு ரகம்.
பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவன் தூங்கும் போது தலை தோள்பட்டையில சாயும் போது, அதை கண்டுக்காம இருக்கிற ஆளுங்க ஒரு ரகம். அவன தட்டி தட்டி எழுப்பி, ஏன்யா உன் தலைய சாயிக்காதனு, மூஞ்சிய கடுப்பா வச்சி சொல்லுற ஆளுங்க ஒரு ரகம்.
மழை பெஞ்சு ஒஞ்ஜ நேரத்துல, ஈரப்த்தாம்மான எதிர் காற்றுள முகத்த காட்டும் போது என்ன ஆனத்தம்.
வாகனச் சக்கரம் சாக்கடையும், சேத்தையும் வாரி அடிச்சாலும், பேருந்துக்கு மட்டும் ரோட்டோர மரம் மஞ்சப்பூவைத்தான் பொழிந்தது.
பேருந்து நிலையத்துல விக்கிற கடலைய எடை போட்டா வித்தான்?, மூணு ரூபாய் போட்டனத்துல பதினைந்து கடலைக்கு மேல இருந்ததுண்டா, இல்லை அதை விட குறைஞ்சிருந்த்தான்னுண்டா !!. ஆயிர ரெண்டாயுற கதை, அறிவியல் புத்தகம் வீட்டுல இருந்தாலும், சாப்பிட்டு முடிச்ச கடலை பொட்டலத்துல இருக்கிற துண்டு செய்தியை ரசித்ததுக்கு ஈடாகும்மா?!. conductor அவரோட பையா குழுக்கி குழுக்கி சில்லறைய எடுக்கிற சத்தம், கே.கே.நகர் எல்லாம் வெளியா வாங்க, இந்தா, உள்ள போங்கம்மா அதான் அவ்வளோ இடம் கடக்குல, அப்புறம் சீட்டுவாங்கியாச்சா? , விசில் சத்தம், கே.கே.நகர் எல்லாம் வெளிய வாங்க, மறுபடியும் விசில் சத்தம் கியர் மாத்துற சத்தம், குழந்தைங்க அழுற சத்தம், அரசியல் பேசுற சத்தம், பேருந்துப் பயணத்தோட நாம வாழ்க்கை பயணத்தையும் மனசுல நினைச்சவாரு அசப்போட்டுக்கிட்டே போறத்துல தான் என்னவொரு ஆனந்தம். !!
Inimai...
ReplyDeleteNaanum rasithadhu undu... Adhai miga miga azhgaai varnithirukureer!!!
Naan idhai padithuvittu... ov'voru vagai'yilum naam endha vagai edru enni paarthu rasithen :)
Kadalai vaangi thindru naanum andha aanandha vigadan paper'ai padithu magizhndhu ullen... :)
Migavum rasitha varigal: Conductor 500ruba illaya nu ketpadhu, iduppai iduppaal idippadhu!!! :D :D