"உங்க ஊரு சாப்புடுல மட்டும் அப்படி என்ன ராகுல் இருக்கு , எல்லாத்திலையும் அரிசிய போடறீங்க, காலையில இட்லி சாம்பார், மதியம் சோறும் சாம்பார், திருப்பி சோறும் ரசம், திருப்பி சோறும் தயிரும், உங்களுது என்னமோ ரொம்ப நல்லா இருக்கிற மாதிரி, அதுக்கு ரொட்டி எவ்வளவோ தேவலாம்.." (மனசில் ஒரு குரல்) ராகுல்! பொறுத்தது போதும் பொங்கி ஏழு! டேய் ! நாதாரிகளா நானும் ஏதோ corporate உலகம் எதுக்கு சண்ட போடணும் சிரிச்சி!, சிரிச்சி!, சமாளிக்கலாம் அப்படின்னு பார்த்தா கடைசியில எங்க சாப்பாட்ட பத்தி கேவலமா பேசி எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடீங்க. "என்னது எங்க சாப்பாடு கேவலம்மா இருக்கா! அடப் பாவிகளா! டேய் உங்க சாப்பாடு நல்லா இருக்குனு சொல்லி இருந்தா போனா போகுதுன்னு விட்ருப்பேன், எங்க சாபாடைய்யா குறை சொல்லுற, நீங்க வக்கிர இந்த ரொட்டி, பருப்பு, பச்ச அரிசி இத விட, டேய் நல்லா கேட்டுக்கோ இத விட எங்க வாழை இலையில அவியல், பொரியல், வறுவல், ஊருக்காய், சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர், பாயாசம், இதெல்லாம் எவ்வளோ மேல் டா!, எங்க சாப்பாடு கேவலம்மா இருக்கா, மனசாட்சின்னு ஒண்ணு உங்களுக்கு இருக்கா, மத...