சின்ன வயசுல இருந்தே, எனக்கு பேருந்துல பிரயாணம் பண்ண ரொம்ப பிடிக்கும், நெரிச்சல் இருந்தாலும், அடுத்தவன் என்ன பண்ணுறான், என்னென்ன பேசுறானுங்க, எந்தெந்த தோரணையில பேசுறானுங்க, எத்தனை விதம்மான மக்கள்கள், இவுங்கள எல்லாம், அவுங்களுக்கு தெரியாம ரசிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப நெடுந்தூரம் பிரயாணம் அப்படின்னா இடையில வண்டி நிக்கிறதுண்டு. எல்லாம் முடிஞ்சு, வண்டி எடுக்கிற நேரத்துல வேகம்மா ஓடி வந்து ஏறுற ஆளுங்க ஒரு ரகம், வேற எதாவுது வண்டியோட ஹாரன் சத்தத்த கேட்டு, நம்ம வண்டியா இருக்குமோனு வந்து பார்த்து ஏமாந்து போயி, எதுக்குடா வம்பு'னு சீக்கரம்மே வந்து உட்காருர ராகம் ஒண்ணு, இடத்துக்காக துண்டு போட்ட இடத்துல, வேற ஒரு ஆள் உட்கார, கீழ தூக்கிப்போட்ட துண்டு எடுத்திக்கிட்டு அமைதியா இருக்கிற ரகம் ஒண்ணு, எடுத்த துண்ட கடுப்பா உதறிட்டு வண்டி கிளம்பின 20 நிமிஷத்துக்கு பிற்பாடு கொஞ்ச கொஞ்சாம முணுமுணுத்த வாய் சத்தம்மா சண்ட போட ஆரம்பிக்கிறது ஒரு ரகம். பொம்பளைங்க கிட்ட சிலிமிஷம் பண்ண உடனே பொங்கி எழுற கூட்டம் ஒரு ரகம், ஐயோ ! ஐயோ ! இப்படி பண்ணுறானே என்ன பண்ணுறது'னு தெரியாம முழிக்கிற சில பேர் ஒரு ரகம்...